நிலாவிடு தூது: சு.ஜெயக்குமார்


கவியொருவன் மனவலியில்
கண்ணீரோடு தூதனுப்புகிறேன்
வாக்கினை வஞ்சகனுக்கு விற்றுவிட்டு
வாழ்க்கையை வாங்க இயலாது
வயல்வெளியெல்லாம் அழித்துவிட்டால்
வாய்க்கரிசி வெளிநாட்டில் கிடைக்காது
குடியில் நாளெல்லாம் கழித்துவிட்டவன்
குடி உயர வழியேது
வீதியில் பெற்றோரைத் தவிக்கவிட்டு
கோவில்கள் சென்றாலும் புண்ணியமேது
ஊழல் பெருச்சாளியாய் உலாவந்து
கலிகாலமிதுவென்றால் பொருளேது
அநீதியை கட்டவிழ்த்து ரசித்துவிட்டு
மழை வேண்டினால் பயனேது
பணமும் பதவியுமே குறிக்கோளாயின்
வாழ்வில் நிம்மதி காண்பதேது
தன் மதி கேளா மானிடனுக்கு
வான்மதியே நீ இதை சொல்லாயோ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...