காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

நிலாவிடு தூது: சு.ஜெயக்குமார்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

கவியொருவன் மனவலியில்
கண்ணீரோடு தூதனுப்புகிறேன்
வாக்கினை வஞ்சகனுக்கு விற்றுவிட்டு
வாழ்க்கையை வாங்க இயலாது
வயல்வெளியெல்லாம்  அழித்துவிட்டால்
வாய்க்கரிசி வெளிநாட்டில் கிடைக்காது 
குடியில் நாளெல்லாம் கழித்துவிட்டவன்
குடி உயர வழியேது
வீதியில் பெற்றோரைத் தவிக்கவிட்டு
கோவில்கள் சென்றாலும் புண்ணியமேது 
ஊழல் பெருச்சாளியாய் உலாவந்து
கலிகாலமிதுவென்றால் பொருளேது
அநீதியை கட்டவிழ்த்து ரசித்துவிட்டு
மழை வேண்டினால் பயனேது
பணமும் பதவியுமே குறிக்கோளாயின்
வாழ்வில் நிம்மதி காண்பதேது
தன் மதி கேளா மானிடனுக்கு 
வான்மதியே நீ இதை சொல்லாயோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.