நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

நிலாவிடு தூது : லட்சுமிபாலா

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

தூது செல்வாயோ முழுநிலவே
என்னவளிடம்
நின் போல்முழுநிலவே 
என்னவளின் வதனம் அதனால் 
என்னவளை இனம் காண உனக்குஎந்த
இடரும் இல்லை உன் குணம்ஒத்ததே
என்னவளின் குணமும்
மேகங்களுடே நீ மறைந்து 
விளையாடுவது போல் 
அவளும் தன் முகம் மறைத்து 
என்னை சீண்டுவது வாடிக்கை

அமாவசையன்று நீ பூமியுடன் ஊடல்
கொண்டு பாராமுகம் கொள்வது போல் 
அவளும் என் மேல் அவ்வப்போது
ஊடல் கொள்வதுண்டு கொஞ்சம்
கேட்டு வருவாயா? ஊடல் 
கொண்டாளோ? என்று.
உன் மூன்றாம் பிறை ஒத்தது
அவளது புன்சிரிப்பு.

அமாவாசை கடந்த பத்து நாள் 
நிலவை ஒத்த அவள் முகம் 
நீ ஊடல் தணிந்து
பூமியை மேகங்களுடே 
மறைந்து பார்ப்பது போல்
அவள் வீட்டு சன்னலில் என்னைத்
தேடி பாதி மறைந்து நிற்பதை நான்றிவேன்
பெளர்ணமியன்று நீ பூமி மேல் பொழியும் பால் 
வெளிச்சம் ஒத்தது என்னவள் என் மேல் வீசும்
காதல் பார்வை
தூது செல்வாயோ முழுநிலவே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.