காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

நிலாவிடு தூது: - கோ. மன்றவாணன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

புறாவைத் தூது விட்டால்
வலை விரித்துப் 
பிடிப்பார்களோ…

காற்றைத் தூதுவிட்டால்
புறப்பட்ட இடத்துக்கே
திரும்புமோ….

நதியைத் தூதுவிட்டால்
கட்டிவிடுவார்களோ…
கல்அணை 

தோழியைத் தூதுவிட்டால்
அவள் அழகில்
அவன் மயங்கிவிடுவானோ…

வண்டுவைத் தூதுவிட்டால்
வழியில் உள்ள
பூவனத்தில் மதுகுடித்து
போதையில் 
பாதை மாறுமோ….

என ஐயுற்ற எனக்கு
உன்னை அல்லால் யாருமில்லை 
தூது செல்ல!

ஞாபகம் வருதே…
அன்னையின் மடியில் அமர்ந்து
அன்று மல்லிகைப்பூ கொண்டுவரச் சொன்னேன்

இன்று
அல்லலுறும் என்மனதை ஏந்திச்சென்று
அவன்முன் வைத்து
நியாயம் கேட்டுவர
நீ வருவாயா நிலவே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.