நிலா விடு தூது: பூ.சுப்ரமணியன்


அவள்
காதல்விழிகள் பட்டு
மலர் மொட்டுக்களே
மணமுடன் மலரும்போது
அவன் இதயம் காதலில்
மலராமல் இருக்குமா ?
அவள் காதலன்
அந்தரங்கமான காதலை
கவிதைகளாக – அவள்
இதயத்தில் செதுக்க
காத்துக் கொண்டிருந்தான் !
அவன் இனிய காதலி
அவனை மறுத்த
அந்தக்கொடிய நாளை
மதுக்கோப்பைகளில்
மயங்கி விழாமல்
கரைக்க நினைக்காமல்
அவள் காதலன்
வானில் முகம்காட்டும்
முழு நிலாவிடம்
மறக்க முடியாத காதலை
காதல் கவிதைகளாக
புலம்பித் தீர்த்தான் !
அவன் புலம்பல்
காதலிக்கு காதில்
விழவில்லையானால்
அவன் தூது விட்ட
முழுநிலாவிடம்
அவன் இனிய காதலி
கேட்டுப் பார்க்கட்டும்!
அவள் காதலனை
என்றாவது ஒருநாள்
நிலாவும் தூது சென்று
அடையாளம் காட்டும்
காதல் கவிதைகளாக
அவன் காதலியிடம்
அவனை அறிமுகப்படுத்தும் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...