காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

நிலா விடு தூது: அ.வேளாங்கண்ணி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

தனியாய் தவம் செய்யும் நிலவேஉனைவிட்டுச் சென்றது யார்?இணையாய் நீ இல்லை இங்குதீவினையைச் செய்தது யார்?எனைப்போல் நீயும் இங்கேதவிப்பாய்இருப்பது எனக்கும் வலிஎனக்காக உதவி நீ செய்துகாட்டுவாயோ காதல் வழி?என் கவிதை வரிகளைக் கொண்டுஉனக்கான ஆறுதல் செய்வேன்என் காதல் தீபத்தை ஏற்றிஎனக்குள்ளே மாறுதல் செய்யேன்உன் பார்வை படும்வேளை அவளைஎன் பாட்டை உணர்த்திடுவாயாஎன் பக்கம் வரச்சொல்லி நீயும்எனக்காக வாதம் செய்வாயாபிடிவாதம் அவள் குணம் தானேபிடி கொடுத்திட‌ மாட்டாளேஅடி நூறு வாங்கவும் தயாரேஎன்பதை நீயும் சொல்வாயாஇதய வலி தாங்குதல் கஷ்டம்மருந்தென்றால் காதல் மட்டும்துடிக்கிறேன் தவிக்கிறேன்காதல் வேண்டிஆக்கிட வேண்டாம் ஆண்டிஎனை அவள் சேர்ந்திடும் வேளைஉன்புகழ் உலகில் சொல்வேனேஎனக்காக நீ தூது சென்றதைஎன்கவி வழியே சொல்வேனே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.