நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

நிலா விடு தூது: -ரெத்தின.ஆத்மநாதன்,

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

தூது போ நிலவே நிலவே
தூயவள் அவளிடம் சொல்லு!
வானினை நிறைக்கும் காதல்
வஞ்சியின் பால் உள்ளதென்று 
காதுக்குக் கலங்க மின்றி
கனிவுடன் எடுத்துச் சொல்லு!

'மதியினும் மிகு ஒளி அவள்
முக வதனத்தில் உள்ளதென்று'

அன்று நான் சொன்னதை நீ
அடி மனத்தில் நிலை நிறுத்தி
பொறாமை கொண்டு எங்கள்
புனித த்தைக் கெடுத்திடாதே!

வளர்வதும்... தேய்வதும்...
வான் நிலவே உன் வாடிக்கை!
என்னவள்...வதனமோ...
என்றைக்கும் பௌர்ணமிதான்!
கண்ணவள் எனக்குந் தான்
கட்டாயம் இதை நீ சொல்லு!

ஒருவித த்தில் எனக்குப் பயம்
உன்னைத் தூது விடுவதற்கு!
'உன்னிலும் பேரழகி என்
உயர்வான காதலியென்று'

சொன்னதை எண்ணி நீ
எம்காதலைச் சொதப்பி விட மாட்டாயே!

வானத்து நிலவு நீ...
பூவுலகில் வந்துதித்த பூ அவள்!
கைக் கெட்டும் தூரத்தில்
கமழும் அவள் வாசம்!

அந்த வாசத்தை நுகர்ந்தாலே
வயிறு பசியாறி விடும்!

விரைந்து போ நிலவே நிலவே
வினாடியும் தாமதிக்காதே!

அவளுக்காய் ஆத்மா ஒன்று
அல்லாடித் திண்டாடுவதை
வாஞ்சையாய் எடுத்துச் சொல்லு
வரச்சொல்லு ஆற்றுப் பக்கம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.