கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

எனை நனைத்த மழை; -பெருமழை விஜய்,​

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

அவனும்...அவளும் 
அதே ஊர்க்கார ர்கள்தான்!
ஒத்த வயதில் ஒன்றாய்ப்படித்த தனால்...
அரும்பிற்று காதல் அவரிருவர் இடையினிலே!

பூவுலகம்    தனிலே 
புது சொர்க்கம் தான் கண்டார்!
பாவுலகம் புகழுமாறு
பண்பாய்ப் பழகி வந்தார்!

விட்டிடுமா இவ்வுலகம்
விளையாடி அவர் மகிழ?
பட்டகடன் கேட்பதைப்போல்
பதைக்க வைத்தது ஜாதி சொல்லி!

ஆண்ஜாதி அவனென்றும்
அதற்கேற்ற பெண்ஜாதி அவளென்றும்
எடுத்துரைத்த வாத த்தை 
ஏற்கவில்லை இச் சமுதாயம்!

ஊர்மாறிப் போனாலும்
உறவற்றுப் போனாலும்
தேடித் தேடி அவரை 
திகைக்க வைத்தது உறவுமுறை!

பட்டதே போதுமென்று 
பரிதவித்த அவ்விருவர்
எட்டா உலகினையே
ஏகினர் கை கோர்த்து!

முட்டாச் செயல்தான்
முடிந்து போன அவர் முடிவு!
எட்டாச் சமுதாயம் 
எப்போது தான் திருந்தும்?!

நம் கண்களிலே பெருகும் மழை
நனைத்து விலக்குமா ஜாதியினை?!
காதல் வயப் படுவோருக்கு 
கற்பிக்குமா நீதியினை?!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.