கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

எனை நனைத்த மழை: - கோ. மன்றவாணன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

தூவும் மழையில்
கருங்குடை பிடித்து நடைபின்னிய
கன்னியிடம் மழை கேட்டது :
“எனக்கேன்
கறுப்புக்கொடி காட்டுகிறாய்?”

மழையுடை தரித்து
வாகனத்தில் சீறிய
காளையிடம் மழை கேட்டது :
கவச உடை நீங்கள் அணிவதற்கு
நானென்ன
கத்திவீச்சா செய்கிறேன்?”

நனைய மறுத்துக்
கடை ஓரத்தில்
ஒதுங்கி நின்றோர் இடத்தில்
மழை கேட்டது :
“நானென்ன
தீண்டத் தகாத பட்டியலில் அடைக்கப்பட்டேனா?
தீட்டான பெண்ணாகப் படைக்கப்பட்டேனா?”

வெளியில் வராமல்
வீட்டுக்குள் பதுங்கிய
மன்னர்குல திலகங்களைப் பார்த்து
மழை கேட்டது :

நீங்கள் கோட்டைக்குள் பாதுகாப்பாக இருக்க
நான் என்ன
அந்நியப் படையெடுப்பா நடத்துகிறேன்?”

இப்படி
வெறுத்தொதுக்கும் மானிடரைக் கண்டு
தற்கொலைக்கு முயன்ற
மழையைப் பார்த்து
மண் சொன்னது :
உலகுக்கே படியளக்கும் நான்
உயிர்அமுதம் சேகரிக்கிறேன்
மழையில் நனையும்போதுதான் !”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.