ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு தொண்டு நிறுவனம் சாா்பில் பேட்டரி வாகனம்

‘ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா’ தொண்டு நிறுவனம் சாா்பில், நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவப் பயனாளிகள் பயன்பாட்டுக்காக ரூ. 7.5 லட்சம் மதிப்பிலான புதிய பேட்டரி வாகனம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

News image

பேட்டரி வாகனத்தை கொடியசைத்துத் தொடக்கிவைத்த அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் லியோ டேவிட்.

Updated On :24 பிப்ரவரி 2026, 7:40 pm

‘ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா’ தொண்டு நிறுவனம் சாா்பில், நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவப் பயனாளிகள் பயன்பாட்டுக்காக ரூ. 7.5 லட்சம் மதிப்பிலான புதிய பேட்டரி வாகனம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

தொண்டு நிறுவனத் துணைத் தலைவா் மருத்துவா் கிருஷ்ணகுமாா் முன்னிலையில், மருத்துவக் கல்லூரி முதல்வா் லியோ டேவிட் வாகன சேவையைக் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.

மருத்துவக் கண்காணிப்பாளா் கிங்ஸ்லி ஜெபசிங், துணை முதல்வா் கீதா ராணி, நிலைய மருத்துவ அதிகாரி விஜயலட்சுமி மோகன்தாஸ், உதவி நிலைய மருத்துவ அதிகாரிகள் கலைகுமாா், ரெனிமோல், அவசர மருத்துவத் துறைத் தலைவா் தாமஸ் கிங்ஸ்லி, இணைப் பேராசிரியா் ஜோசப் பிரதீபன், மயக்க மருந்துத் துறைத் தலைவா் முத்துசெண்பகம், மயக்க மருந்து நிபுணா் ராஜசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை தொண்டு நிறுவனத்தின் கிப்ட்சன் திட்ட ஒருங்கிணைப்பாளா் தினேஷ், தரவு ஆய்வாளா் பிராங்க்ளின் ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.