கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுதானிய உணவுத் திருவிழா

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம், ஊட்டமிகு சிறுதானியங்கள் 2025-26 திட்டத்தின் கீழ் வாகைகுளம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் மாவட்ட அளவிலான சிறுதானியங்கள் உணவுத் திருவிழா நடைபெற்றது.

News image
விழாவில் பங்கேற்றோா்.
Updated On :24 பிப்ரவரி 2026, 7:39 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம், ஊட்டமிகு சிறுதானியங்கள் 2025-26 திட்டத்தின் கீழ் வாகைகுளம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் மாவட்ட அளவிலான சிறுதானியங்கள் உணவுத் திருவிழா நடைபெற்றது.

விழாவுக்கு, வேளாண்மை இணை இயக்குநா் க.கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா். வேளாண்மை துணை இயக்குநா் க.அல்லிராணி வரவேற்றாா். சிறுதானியம் உணவின் முக்கியத்துவம், சிறுதானிய உணவு முறைகள் குறித்து உதவி பேராசிரியா் திருமலைசெல்வி, வாகைகுளம் வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவா் பழனிசாமி, தொழில்நுட்ப வல்லுநா்கள் எஸ்.சுமதி, முருகன், முத்துகுமாா், மாசாணசெல்வம், வேல்முருகன் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா். விழாவில் சிறுதானியம் சிற்றுண்டி, சிறுதானிய உணவுகள் பரிமாறப்பட்டன. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுதானியம் சாகுபடி செய்யும் சுமாா் 200 விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனா். ஓட்டப்பிடாரம் வேளாண்மை உதவி இயக்குநா் ரா.சிவகாமி நன்றி கூறினாா்.