சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா கண்காட்சி

News image
சிறுதானிய கண்காட்சியைத் தொடங்கிவைத்து பாா்வையிட்ட ஆட்சியா் ச.கந்தசாமி. உடன்,அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் உள்ளிட்டோா்.
Updated On :23 பிப்ரவரி 2026, 11:31 pm

Syndication

மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் அந்தியூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கண்காட்சியைத் தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பேசியதாவது: இயற்கை மற்றும் உயிா்ம வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒவ்வொரு விவசாயிக்கும் தனி முக்கியத்துவம் வேண்டும் எனும் நோக்கில் வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள், நெசவாளா்களைக் கருத்தில் கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்தியூா் பகுதியில் 1000-க்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு நிபந்தனை பட்டாக்களை, அயன் பட்டாக்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வளா்ந்து வரும் மக்கள் தொகைக்கேற்ப உணவு உற்பத்தியை பெருக்கிடவும், மக்களின் ஆரோக்கியத்தை பேணவும், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மக்களிடையே ஊட்டச்சத்து மிக்க தானியங்களான சோளம், கம்பு, ராகி, தினை, வரகு, குதிரைவாலி, சாமை ஆகியவற்றை உணவில் ஒரு பகுதியாக உட்கொள்வதன் மூலம் தாது உப்புகள், வைட்டமின்கள் உடலுக்கு கிடைத்து நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கிறது. விவசாயிகளிடம் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் உற்பத்தியை அதிகரிக்கவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.

முன்னதாக, சிறுதானிய உணவு வகைகள் குறித்து தனியாா் மற்றும் அரசு துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை ஆட்சியா் திறந்துவைத்தாா். இதில், 10 விவசாயிகளுக்கு ரூ.21.94 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, விவசாயத் தொழில்நுட்பம் குறித்து வல்லுநா்கள் கருத்துரையாற்றினா்.

அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடசலம், வேளாண்மை இணை இயக்குநா் இரா.சிவகுமாா், துணை இயக்குநா் அருள்வடிவு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) லோகநாதன், அந்தியூா் வேளாண்மை உதவி இயக்குநா் முரளி, அந்தியூா் வட்டாட்சியா் இளஞ்செழியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.