நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

கோடை மழை- கவிஞர் கே. அசோகன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

சித்திரையில் கதிரவனின் அண்மை தானே
சீறிப்பாயும் வெம்மையின் தாக்க மாகும்!
கத்தும்கிளி சோலைகள் பக்கம் சென்றே
களிப்பாக இருக்கவே எண்ணம் தோன்றும்!
கத்துங்கடல் ஓரத்திலே  கூட்டமு மாய்
காலாற நடக்கத்தான்  ஆவல் கூட்டும்
புத்தாண்டு பிறந்துதான் புத்தொளி கூட்ட
பெய்திட்டால் கோடைமழை நலம் தானே!
        
ஆடையிலே சிறந்ததுதான் பருத்தி ஆடை
அதுதணிக்கும் வெம்மையை கோடை யிலே! 
கோடையிலே வேண்டுவதே குளிர் தென்றல்
குளுகுளு தென்றலோடு மகிழ்ந்திடு வோமே!
மேடையிலே வீசிடும் மெல்லிய காற்றாய்
மென்நகையாள் கூறிவிட்ட  காதல் போல
வாடையோடு சேர்ந்தேதான் திரண்டு வந்து
வான்மேகம் பொழிந்திடுமோ! கோடை மழை!
        
அகில்பரப்பும் வாசம்தான் காடே சூழும்!
அனல்பறக்கும் பேச்சுதான் அரசிய லாகும்!
தகிக்கின்ற கோடையிலே தாபத் தோடு
தவித்தேதான் ஏங்கிடுவோம் கோடை மழை!
முகில்குடித்த கடல்நீரை தேக்கி வைத்து
மழையாக பொழிந்தால் மகிழ்ச்சி தானே!
தகிப்பாலே துவளுகின்ற மக்கள் கூட்டம்
தணிந்திடுமே! கோடைமழை! பொழிந் தாலே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.