சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

என் ஓட்டம் என் இலக்கு: கே. அசோகன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

அறியாத அகவை ஐந்து வரை
அறியவே  யில்லை என்இலக்கு!
தெறிக்கும் புன்னகை பரிசாக்கி
தெய்வங்க ளிணை  யானேன்!

பறிக்க வொண்ணா அரும்புகளாய்
பளிச்சென்ற முகத்தைக் காட்டி
பரவச மாக்கியே காண்போரை
பறக்கவும் செய்தேன் வானிலே!

அகவை ஆறென ஆனபின்னே
அங்கே யிங்கே ஓடலானேன்!
முகத்தில் கொஞ்சம் சினம்சேர
முணுமுணுப்பு உடன் குடியமர
விகற்பமும் அணியாய் வகுத்திட
விளையாட போட்டி போட்டேன்!

வெற்றியே இலக்கு மென்றேன்!
விடாப்பிடி குணமும் கொண்டேன்!
வயதோ பதினாறு ஆனபின்னே
வாலிபத்தின் வாசலில் நின்றே
வயதின் வேலையைக் காட்ட
வனிதையர் பின்னால் சென்றே

மோகமும்  கொள்ள லானேன்
மோகமெது காதலெது புரியாது
அயற்சியாய் மலைத்தே நின்று
அவதியை  தேடிக் கொண்டேன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.