மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

17.03.1920: ‘வங்கபந்து’ ஷேக் முஜிபுர் ரஹ்மான் பிறந்த தினம் இன்று!

ஷேக் முஜிபுர் ரஹ்மான் கிழக்கு வங்கப் பகுதியின் டோங்கிபுரா கிராமத்தில் 17.03..1920-இல் பிறந்தவர்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

DIN

ஷேக் முஜிபுர் ரஹ்மான் கிழக்கு வங்கப் பகுதியின் டோங்கிபுரா கிராமத்தில் 17.03..1920-இல் பிறந்தவர். முஸ்லிம் மாணவர் அமைப்பில் 1940-ல் சேர்ந்து மாணவர் தலைவர் ஆனார். 1943-ல் வங்காள முஸ்லிம் லீக்கில் சேர்ந்தார்

பாகிஸ்தானில் உருது மட்டுமே தேசிய மொழி என்று 1949-ல் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு வங்கத்தில் நடந்த போராட்டங்களுக்கு தலைமை யேற்றார். கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டும் 13 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். மக்கள் ஆதரவு பெருகியதால் விடுதலை செய்யப்பட்டார்.

அவாமி லீக் கட்சியில் இணைந்தார். 1955-ல் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றார். கிழக்கு வங்கம் 1956-ல் கிழக்கு பாகிஸ்தான் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1958-ல் ஜெனரல் அயூப்கான், ராணுவ ஆட்சியைக் கொண்டு வந்தார். இதை எதிர்த்த முஜிபுர் கைது செய்யப்பட்டார்.

சிறையில் இருந்து வெளிவந்த இவர், தலைமறைவு இயக்கத்தைத் தொடங்கினார். எந்த வேறுபாடுமின்றி அனைத்து வங்காளிகளின் ஏகோபித்த ஆதரவும் கிடைத்ததால் ‘வங்கபந்து’ (வங்காளிகளின் நண்பர்) என்று போற்றப்பட்டார்.

1970-ல் நடந்த பொதுத் தேர்தல்களில் அவாமி லீக் கட்சி அபார வெற்றி பெற்றது. ஆனால் இவர் பிரதமராவதை ராணுவமும், முக்கியத் தலைவர்களும் விரும்பவில்லை. பாக். அதிபர் யாஹியா கான் ராணுவச் சட்டத்தைக் கொண்டு வந்து, அவாமி லீக்கை தடை செய்தார். புரட்சி வெடித்தது. ஏராளமானோர் கொல்லப் பட்டனர். முக்தி பாஹினி படை உருவானது. இந்திய ராணுவத்தின் உதவியுடன் முக்தி பாஹினி படையினர் பாகிஸ்தானுடன் போரிட்டு வென்றனர். 1971-ல் வங்க தேசம் உருவானது. புதிய தேசத்தின் முதல் அதிப ராகப் பொறுப்பேற்றார். பின்னர், பிரதமராகவும் இருந்தார்.

ராணுவ சதியினால் 1975-ல் முஜிபுர் ரஹ்மானும் குடும்ப உறுப்பினர்களும் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது அவருக்கு வயது 55. அவரது இரு மகள்கள் (வங்கதேசத்தின் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா, அவரது சகோதரி ஷேக் ரிஹானா) மட்டும் வெளியூரில் படித்ததால் தப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.