நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

'தமிழ் தெரிஞ்ச பொண்ணையே போடுங்க, கற்பழிக்கிறேன்'

நகைச்சுவை நடிப்பில் தனித்தன்மை வேண்டும் என்கிறார் கவுண்டமணி.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவியோகி வேதம்

நகைச்சுவை நடிப்பில் தனித்தன்மை வேண்டும் என்கிறார் கவுண்டமணி. நகைச்சுவை வசனங்களில் தங்கவேல். குரலின் விஷேசத்தன்மை எம்.ஆர்.ராதா. கோணங்கி சேஷ்டையில் சந்திர பாபு. இவங்க இந்த மாதிரி தனித்தன்மையிலதான் பிரபலமானங்க. காமெடி கலந்த நல்ல கேரக்டரும், பண்ணனும் என்பது இவரது விருப்பம்.

நகைச்சுவை நடிகரான இவரையே சிரிக்க வைத்த அனுபவங்கள் உண்டு. அவரே கூறுகிறார்.    

‘கல்லுக்குள் ஈரம்’ படப்பிடிப்பின் போது நான் குடிச்சிட்டு வீட்டுக்கு வரேன். என் மகளாக நடித்த அருணா நான் குடிச்சிட்டு வந்ததைக்க கண்டுபிடிச்சு , உடனே யார் துட்டு குடுத்தாங்கன்னு கேக்க, 'பாரதிராஜா' ன்னு சொன்னவன், அடப்பாவி எனக்கு குடிக்க காசு கொடுத்திருக்காரேன்னு அவரோடயே சன்டை போட கிளம்புறேன்.

அந்த சமயத்தில் அருணா கதவ சாத்திட்டு 'எங்கேயும் போகாத, இங்கேயே உக்காரு' ன்னு என்னை பாத்து கத்தனும். உணர்ச்சி வேகத்தில தன்னுடைய தாய்மொழியான தெலுங்கிலேயே 'எங்கட போவுன்னு..இக்கட கூசு'   ன்னு கத்த எனக்கு ஒரே சிரிப்பு. ஒரு வழியா அந்த காட்சிய படமாக்கி முடிச்சதும் பாரதிராஜா உட்பட எங்க எல்லாருக்குமே ஒரே சிரிப்பு.

'பெண்ணின் வாழ்க்கை' என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அதில் நான் அருணாவை கற்பழிக்கிற சீன். அவரைக் கட்டிப்பிடித்தவுடன் உணர்ச்சி வேகத்தில் தமிழில் கத்த வேண்டியவர் தெலுங்கிலேயே வசனம் பேச ஆரம்பிக்க, எனக்கு மூட் அவுட் ஆகி விட்டது. டைரக்டர் விஜயனிடம் உடனே, 'சார், தமிழ் தெரிஞ்ச பொண்ணையே போடுங்க, கற்பழிக்கிறேன்' ன்னு சொல்ல செட்டிலேயே ஒரே சிரிப்புதான்.

தமிழ் சினிமா உலகில் அண்மைக்காலமாக நிறைய பேர் படங்களை தயாரிக்கிறேன் என்று வந்திருப்பதும், நிறைய பேர் நான் நடிக்கிறேன் என்று வந்திருப்பதும் கவுண்டமணியால் வரவேற்க முடியாத விஷயங்கள்.

இந்த அபரிமிதமான வளர்ச்சி தேவையில்லை  விஷயம் தெரிந்த அனுபவசாலிகள் உறுதியான திட்டமிட்ட குறிக்கோளுடன் செயல்பட்டால்தான் பட உலகம் முன்னேற முடியும் என்பது இவருடைய அபிப்பிராயம். 

(சினிமா எக்ஸ்பிரஸ் 15.01.83 இதழ்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.