டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பாசிப்பருப்பு நெய் உருண்டை

பாசிப் பருப்பை வாணலியில் லேசாக வறுக்கவேண்டும். வாசனை வரும் வரை வறுத்தால் போதுமானது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

தவநிதி


தேவையானவை:
பாசிப் பருப்பு - 2 கிண்ணம்
சர்க்கரை - 2 கிண்ணம்
நெய் -  200 கிராம்
ஏலக்காய் - 6
முந்திரி உடைத்தது - 50 கிராம்

செய்முறை:  பாசிப் பருப்பை வாணலியில் லேசாக வறுக்கவேண்டும். வாசனை வரும் வரை வறுத்தால் போதுமானது.

வறுத்த பருப்பை மிக்சியில் அரைக்கவும். அதனை  சலித்து எடுத்து நைசான மாவை லட்டுக்கு வைத்துக் கொள்ளவும். அதேபோன்று சர்க்கரையையும் மிக்சியில் அரைத்து,  பாசிப் பருப்பு மாவுடன் சேர்த்து கலக்கவும்.  அதனுடன் ஏலக்காயைப் பொடித்து  சேர்க்கவும்.

முந்திரிப் பருப்பை சிறிது நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு  கலந்து  கொள்ளவும்.

பின்னர் வாணலியில் 200 கிராம் நெய்யை லேசாக உருக்கி அதை மாவில் ஊற்றவும்.  மாவை நன்கு கலந்து வெது வெதுப்பான சூட்டிலேயே கையால்  லட்டு பிடிக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.