டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சி.பி.சரவணன்


மனித இயல்புகளையும் அவர்கள் தகுதிகளையும் தீர்மானிக்கும் முதன்மைக் காரணி, இன வேறுபாடுகள் குறிப்பிட்ட இனங்களை மற்றவர்களிலும் உள்ளார்ந்த அடிப்படையில் மேலானவர்களாக ஆக்குகிறது என்னும் நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்த கொள்கையே இனவாதம் எனப்படுகிறது.

இனவாதம்

இனம் மற்றும் இனவாதத்தின் கருத்துக்கள் உயிரியல் பண்புக்கூறுகளை அடிப்படையாகக் கொண்டதாக இருப்பினும், அந்த கருத்துக்கள் அடிப்படையில் இனம் பற்றி வரையப்பட்ட எந்த முடிவுகளும் கலாச்சார கருத்தியல்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இனவாதம், ஒரு கருத்தியலாக, தனிப்பட்ட மற்றும் நிறுவனம் ஆகியவற்றில் ஒரு சமூகத்தில் உள்ளது. கடந்த அரை நூற்றாண்டில் அல்லது மேலை நாடுகளில் "வெள்ளை இனவெறி" மீது குவிந்த ஆராய்ச்சி மற்றும் வேலை அதிகமானதாக இருந்துள்ளது. தனிமனித மற்றும் குழுவான பாரபட்சங்களையும், பெரும்பான்மை அல்லது மேலாதிக்க சமூகக் குழுவில் வழங்கப்பட்ட பொருள் மற்றும் கலாச்சார நன்மைகள் விளைவிக்கும் பாகுபாடு செயல்களையும் உள்ளடக்கிய இனவாதத்தை பரவலாக வரையறுக்க முடியும். "வெள்ளை இனவெறி" என்று அழைக்கப்படுபவை சமூகங்களில் கவனம் செலுத்துகின்றன.

இனம் மற்றும் இனம் உறவுகள் சமூகவியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் படிப்படியாக முக்கியத்துவம் வாய்ந்தவை. பெரும்பாலான சமூகவியல் இலக்கியங்கள் வெள்ளை இனவாதத்தில் கவனம் செலுத்துகின்றன. 

Story image

W.E.B.டூ பாய்ஸ்

W.E.B.டூ பாய்ஸ்,( W.E.B.Du Bois) "இருபதாம் நூற்றாண்டின் பிரச்னை வண்ணம் பிரச்சினை’ என்று எழுதினார். "சமூக மற்றும் பொருளாதாரத்தில், இனவாத நடவடிக்கைகளின் விளைவுகள் பெரும்பாலும் வருவாய், வருவாயில், நிகர மதிப்பில், மற்றும் பிற கலாச்சார வளங்களை அணுகுவதன் மூலம் சமத்துவமின்மை இனக்குழுக்கள் இடையே இருக்கும். 

தனி மனித அல்லது அமைப்புரீதியான வடிவங்களுள்ள இனவாதத்தை தடுக்கவும் அது பற்றி பேசவும் உதவக்கூடிய ஒரு நல்ல இன வாத எதிர்ப்பு திட்டத்தை உருவாக்கலே ஒரு நல்ல தொடக்கமாகும்.  அது பின்வருவனவற்றை உள்ளடக்கலாம்:

  • பொருத்தமான சூழலில் இனம் சம்பந்தமான எண்ணிக்கைத் தரவுகளைச் சேர்த்தல்.
  • சரித்திர ரீதியான இனம் சம்பந்தமான பிரதிகூலங்களைப் பதிதல்.
  • தீங்கு விளைவிக்கக் கூடிய வேலையிடக் கலாசாரத்தை, கொள்கைகளை, செயல்முறைகளை, தீர்மானம் எடுக்கும் படிமுறைகளை மீட்டல்.
  • இன வாதத்துக்கும், இனப்பாகுபாட்டுக்கும், துன்புறுத்தலுக்கும் எதிரான கொள்கைகளையும் கல்வித்திட்டங்களையும் உருவாக்கலும் செயற்படுத்தலும்.
  • இன வாதத்துக்கு எதிரான திட்டம், அமைப்புக்கள் சம உரிமையையும், பல்வகைமை லட்சியத்தையும் விருத்தி செய்தலைச் சுலபமாக்குவதுடன்  நல்ல தொழில் உணர்வையும் கொடுக்கும். 


இனப் படுகொலை (Genocide)

மனிதக் குழு ஒன்றினை முற்றாக ஒழிக்கும் முயற்சியுடன், அவர்களை முற்றாக அழிப்பதை நோக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் செயல்பாடே இனப்படுகொலை எனப்படுகிறது. ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது போலந்துச் சட்ட வல்லுனரான ராஃபேல் லெம்கின் (Raphael Lemkin) என்பவரே இனப்படுகொலை என்னும் கருத்துருவுக்கு முதன் முதலில் சொல்வடிவம் கொடுத்தவராவார். 

Story image

ராஃபேல் லெம்கின்

1933-ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடுகள் கூட்டமைப்பின் (League of Nations), சட்ட அவையின் அனைத்துலகக் குற்றவியல் சட்டம் தொடர்பான மாநாட்டில், லெம்கின் ஒரு முன்மொழிவைச் செய்தார். லெம்கின் “காட்டுமிராண்டித் தனமான குற்றம்“ (Crime of Barbarity) உலகச் சட்டங்களுக்கு எதிரான ஒரு குற்றம் என்னும் பொருளில் கட்டுரை ஒன்றை எழுதினார். இக் குற்றம் தொடர்பான கருத்துரு பின்னர் இனப்படுகொலை தொடர்பான எண்ணமாக உருவானது. இது, 1933 ஆம் ஆண்டில், ஈராக்கில் அசிரியர்கள் கொலை செய்யப்பட்ட அநுபவத்தில் இருந்து உருவானதாகும். லெம்கினுக்கு, ஈராக்கில் நடைபெற்ற இச் சம்பவம், முதலாம் உலகப் போரின்போது ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுபடுத்தியது. அந்த ஆண்டிலேயே லெம்கின், இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களைச் சட்டத்துக்குப் புறம்பானதாக ஆக்கும்படியான தனது முன்மொழிவை, நாடுகள் கூட்டமைப்பின் சட்ட அவையிடம் கையளித்தார். இம் முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப் படவில்லை என்பதுடன், அப்போது நாஸி ஜெர்மனியுடன் சமாதானம் செய்ய்துகொள்ள விரும்பிய போலந்து அரசும், லெம்கினின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் லெம்கின் தொடர்ந்தும் தனது நோக்கங்களுக்காகப் பல வழிகளிலும் போராடி வந்தார். லெம்கினின் வெற்றிகரமான பிரச்சாரங்கள் 1948 ஆம் ஆண்டில் இனப்படுகொலை அனைத்துலகச் சட்டங்களின் கீழ் குற்றமாக்கப்படுவதற்கு உதவின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.