பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தாஜ் மகால் செல்லும் தாய்மார்கள் கவனத்துக்கு: உங்களுக்காகவே சிறப்பு வசதி!

ஆக்ராவில் அமைந்துள்ள உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ் மகாலை சுற்றிப் பார்க்கச் செல்லும் தாய்மார்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2019, 6:07 am


ஆக்ராவில் அமைந்துள்ள உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ் மகாலை சுற்றிப் பார்க்கச் செல்லும் தாய்மார்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது தாஜ் மகாலுக்கு வரும் தாய்மார்கள், தங்கள் பிள்ளைக்கு பாலூட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய அறை ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் மட்டுமல்ல, சர்வதேச நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளையும் கவரும் ஒரு இடமாக தாஜ் மகால் உள்ளது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 22 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் தாஜ் மகாலைப் பார்க்க வருகிறார்கள். எனவே தாஜ் மகாலைப் பார்க்க வரும் தாய்மார்களின் வசதிக்காக பாலூட்டும் அறை கட்டப்படும் என்று இந்த ஆண்டின் துவக்கத்தில் இந்திய தொல்லியல் துறை அறிவித்திருந்தது.

இந்த நிலையில் கட்டி முடிக்கப்பட்ட பாலூட்டும் அறையை மத்திய கலாசாரத் துறை இணை அமைச்சர் பிரஹாத் ஸ்வர்ன்கார் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

இந்திய சுற்றுலா மையங்களில் பாலூட்டும் அறை திறக்கப்பட்டிருப்பது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்று இந்திய தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாஜ் மகால் வளாகத்துக்குள்ளேயே 12க்கு 12 அடி அகலமுள்ள இந்த அறை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதேப்போல ஆக்ரா கோட்டையிலும் பாலூட்டும் அறை அடுத்த மாதம் கட்டி முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.