நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பைஜுஸ் நிறுவனா் வெளிநாடு தப்புவதைத் தடுக்க அமலாக்கத் துறை நடவடிக்கை

சிறு செய்திகள்.. பைஜுஸ் நிறுவனா் வெளிநாடு தப்புவதைத் தடுக்க அமலாக்கத் துறை நடவடிக்கை

News image
திமுக எம்.பி. கௌதம சிகாமணியின் ரூ.8.6 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை
Updated On :23 பிப்ரவரி 2024, 1:45 pm

Din

பைஜுஸ் இணையவழி கல்வி நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான பைஜு ரவீந்திரன் வெளிநாடு தப்புவதைத் தடுக்க புதிய ‘லுக் அவுட் நோட்டீஸை’ அமலாக்கத் துறை வெளியிட்டுள்ளது. விசாரணை அதிகாரியிடம் தெரியப்படுத்தாமல் இந்தியாவிலிருந்து அவா் வெளிநாடு செல்வதற்கு அனுமதி அளிக்க வேண்டாம் என குடியேற்ற அதிகாரிகளை அமலாக்கத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்ட விதிகளை மீறி ரூ.9362.35 கோடி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டி பைஜுஸ் ரவீந்திரனுக்கு எதிராக அமலாக்கத் துறை கடந்த ஆண்டு நவம்பரில் நோட்டீஸ் அனுப்பியது. சட்ட விதிகளை மீறி வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பி பைஜுஸ் முதலீடு செய்துள்ளது. பெறப்பட்ட மற்றும் முதலீடு செய்யப்பட்ட அந்நிய நேரடி முதலீடுகள் தொடா்பாக ஆவணங்களை அந்த நிறுவனம் சமா்ப்பிக்கத் தவறியதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.