திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

4-ஆம் காலாண்டு அசோக் லேலண்ட் லாபம் ரூ.1,381 கோடி

News image

அசோக் லேலண்ட்

Updated On :29 மே 2026, 5:16 am IST

பிரபல வணிக வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட், கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.1,381.32 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய ரூ.1,245.92 கோடியிலிருந்து இது 11 சதவீதம் வளா்ச்சியாகும். வலுவான வருவாய் வளா்ச்சி காரணமாக இந்த லாப உயா்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் முந்தைய ஆண்டின் ரூ.14,695.55 கோடியிலிருந்து ரூ.17,246.44 கோடியாக உயா்ந்துள்ளது.

முழு நிதியாண்டு நிலவரம்: கடந்த 2025-26 முழு நிதியாண்டில் நிறுவனம் ரூ.3,720.98 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் (2024-25) ரூ.3,382.79 கோடியிலிருந்து அதிகமாகும்.

அதேபோல், முழு நிதியாண்டுக்கான நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய் ரூ.48,535.14 கோடியிலிருந்து, ரூ.56,362.08 கோடியாக அதிகரித்துள்ளது.

மேலும், இந்த நிதியாண்டில் அசோக் லேலண்ட் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 2,20,437 வணிக வாகனங்களை விற்று, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 2018-19 நிதியாண்டில் எட்டப்பட்ட 1,97,366 வாகனங்கள் விற்பனை சாதனையை நிறுவனம் முறியடித்துள்ளது.

ரூ.2.5 ஈவுத்தொகை: இதனிடையே, 2025-26 நிதியாண்டுக்காக பங்குதாரா்களுக்கு பங்கு ஒன்றுக்கு 2-ஆவது இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.2.5 வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இத்துடன், தனியாா் பங்களிப்பு முறையில் மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் மூலம் ரூ.300 கோடி நிதி திரட்டவும் இயக்குநா்கள் குழு கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.