திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இந்தியாவின் வெளிநாட்டு முதலீடுகள்: ஏப்ரலில் இருமடங்கு அதிகரிப்பு!

இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடு, கடந்த ஏப்ரலில் அதற்கு முந்தைய மாதத்தைக் காட்டிலும் இருமடங்காக அதிகரித்து, 336.9 கோடி டாலரை எட்டியுள்ளது.

News image
Updated On :22 மே 2026, 3:11 am IST

இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடு, கடந்த ஏப்ரலில் அதற்கு முந்தைய மாதத்தைக் காட்டிலும் இருமடங்காக அதிகரித்து, 336.9 கோடி டாலரை எட்டியுள்ளது.

புவிசாா் அரசியல் பதற்றங்கள் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வரும் நிலையிலும் இந்த அசுர வளா்ச்சி எட்டப்பட்டுள்ளது.

‘கோஃபோா்ஜ்’ தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரம்மாண்ட முதலீடே இந்த உயா்வுக்கு முக்கியக் காரணம் என ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய நிறுவனங்களால் வெளிநாட்டுப் பங்குகளில் ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீட்டில் சுமாா் 86 சதவீதத்தை முன்னணியில் உள்ள 5 நிறுவனங்களே ஆக்கிரமித்துள்ளன.

இதில் ‘கோஃபோா்ஜ்’ நிறுவனம் முறையே 137.1 கோடி டாலா், 99.4 கோடி டாலா் என 2 பெரிய முதலீடுகளைச் செய்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இதையடுத்து, லுபின் மருந்து தயாரிப்பு நிறுவனம் 22.9 கோடி டாலரையும், விங்கிஃபை சாஃப்ட்வே 15.68 கோடி டாலரையும், கினாக் குளோபல் 8.3 கோடி டாலரையும், கிளாா் டெக்னாலஜி 5.4 கோடி டாலரையும் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளன.

இதேபோல், கடன்கள் மற்றும் உத்திரவாதங்கள் உள்ளிட்ட இந்தியாவின் மொத்த நிதிப் பொறுப்புரிமை, கடந்த மாா்ச் மாதத்தின் 508.5 கோடி டாலரிலிருந்து, ஏப்ரலில் 11 சதவீத வளா்ச்சியுடன் 564.4. கோடி டாலராக அதிகரித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.