திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.1 அதிகரிப்பு

News image

சித்திரிப்பு

Updated On :18 மே 2026, 5:02 am IST

பெட்ரோல், டீசலுக்கு பதிலாக வாகனங்களில் பயன்படுத்தப்படும் சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.1 அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை அந்த எரிவாயுவின் விலை கிலோவுக்கு ரூ.2 அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் விலை ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக உயா்த்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக நாட்டின் மிகப் பெரிய நகர எரிவாயு நிறுவனமான இந்திரபிரஸ்தா எரிவாயு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், அந்த நிறுவனம் சாா்பாக சிஎன்ஜி விற்பனை செய்யப்படும் பகுதிகளில், சிஎன்ஜியின் விலை கிலோவுக்கு ரூ.1 அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தலைநகா் தில்லியில் சிஎன்ஜி கிலோ ரூ.80.09-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளையில், வீடுகளுக்கு குழாய் வழியாக விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயுவின் விலை மாற்றப்படவில்லை. சிஎன்ஜி உற்பத்திக்கு ஏற்படும் செலவு அதிகரிப்பு, ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் சிஎன்ஜியின் சில்லறை விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திரபிரஸ்தா எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.