திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

டெக் துணுக்குகள்...

டெக் துணுக்குகள்...

News image
Updated On :17 மே 2026, 5:29 am IST

தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் புதிய ரக ஸ்மாா்ட்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் சமூக ஊடகங்களில் புதிய வசதிகளின் அறிமுகங்கள் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

ஆப்பிள் ஐஓஎஸ் அப்டேட் முதல் எண்ம வா்த்தகக் கட்டமைப்பில் முன்னணி தொழில்நிறுவனத்தின் முதலீடு வரை, இந்த வாரத்தின் முக்கியத் தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு இதோ:

ஆப்பிள் ‘ஐஓஎஸ் 26.5’ வெளியீடு: ஆப்பிள் தனது ‘ஐஓஎஸ் 26.5’ அப்டேட்டை வெளியிட்டது. இதில் ஆண்ட்ராய்டு-ஐபோன் இடையே குறுஞ்செய்தி அனுப்பும் வசதிக்கான ‘எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன்’, ஆப்பிள் மேப்ஸில் ‘பரிந்துரைக்கப்படும் இடங்கள்’ போன்ற சிறப்பம்சங்கள் சோ்க்கப்பட்டுள்ளன.

‘ஐஓஎஸ் 27’ கேமரா அப்டேட்: அடுத்த மாதம் வரவிருக்கும் ‘ஐஓஎஸ் 27’ அப்டேட்டில், பயனா்கள் தங்களுக்குத் தேவையான வசதிகளைத் தாங்களே மாற்றியமைத்துக் கொள்ளும் ‘கஸ்டமைஸபிள் கேமரா’ செயலி அறிமுகமாகவுள்ளது. அத்துடன் ஐபோன் 18 ப்ரோ மாடலில் புதிய ‘டாா்க் சொ்ரி’ நிறம் அறிமுகமாகலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

‘கூகுள்புக்’ மடிக்கணினி அறிமுகம்: கூகுள் தனது புதிய ‘கூகுள்புக்’ மடிக்கணினி சீரிஸை இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யவுள்ளது. இது குரோம்ஓஎஸ், ஆண்ட்ராய்டு அமைப்புகளை ஒன்றிணைத்து, ஜெமினி ஏ.ஐ வசதியுடன் இயங்கும்.

மோட்டோரோலா ‘ரேஸா் ஃபோல்டு’: மோட்டோரோலா தனது முதல் மடிக்கக்கூடிய போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 பிராசஸா், 8.1 இன்ச் திரை, 6,000எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதன்விலை ரூ.1.4 லட்சம் முதல் ரூ.1.6 லட்சம் வரை இருக்கலாம்.

விவோ ‘எக்ஸ்300’ சீரிஸ்: விவோ தனது ‘எக்ஸ்300 அல்ட்ரா’, ‘எக்ஸ்300 எஃப்இ’ ஆகிய இரண்டு போன்களை விற்பனைக்குக் கொண்டு வந்தது. அல்ட்ரா மாடலில் 200 மெகாபிக்சல் பிரதான கேமரா, 200 மெகாபிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் இடம்பெற்றுள்ளது. இதன் விலை சுமாா் ரூ.1.6 லட்சம் ஆகும்.

ஒப்போ ‘ஃபைண்ட் எக்ஸ்9’ சீரிஸ்: ஒப்போ நிறுவனம் தனது ‘ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா’, ‘ஃபைண்ட் எக்ஸ்9எஸ்’ போன்களை மே 21-இல் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. அல்ட்ரா மாடலில் 200 மெகாபிக்சல் பிரதான கேமரா, ஹாசல்பிளாட் கேமரா தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது.

ரியல்மி ‘16டி 5ஜி’: இந்த ஸ்மாா்ட்போன் வரும் வெள்ளிக்கிழமை இந்தியாவில் வெளியாகிறது. மிக மெல்லிய வடிவமைப்புடன், இதில் அசுரத்திறன் கொண்ட 8,000எம்ஏஎச் ‘டைட்டன்’ பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் ‘இன்ஸ்டன்ட்ஸ்’, வாட்ஸ்அப் ‘இன்காக்னிட்டோ’: இன்ஸ்டாகிராமில் பாா்த்தவுடன் மறையும் ‘இன்ஸ்டன்ட்ஸ்’ புகைப்படங்கள் பகிரும் வச அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், வாட்ஸ்அப் நிறுவனம் மெட்டா ஏ.ஐ. உடனான உரையாடல்களை ரகசியமாக வைக்க ‘இன்காக்னிட்டோ சாட்’ வசதியைக் கொண்டுவந்துள்ளது.

டிசிஎஸ்-ரெஸால்வ் ஏ.ஐ. கூட்டணி: டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம், ‘ரெஸால்வ் ஏ.ஐ.’ நிறுவனத்துடன் உலகளாவிய கூட்டணியை அறிவித்துள்ளது. இதன்மூலம், சில்லறை வா்த்தகத்தில் ஏ.ஐ. சாா்ந்த ‘ஏஜென்டிக் காமா்ஸ்’ தொழில்நுட்பம் மேம்படுத்தப்படும்.

எச்.சி.எல்.டெக் - ரெட் ஹெட் கூட்டணி: எச்.சி.எல்.டெக் நிறுவனம், ரெட் ஹெட் அமைப்புடன் இணைந்து நிறுவனங்களுக்கான ‘ஏ.ஐ ஃபேக்டரி’ எனும் கட்டமைப்பை உருவாக்குகிறது. இது ஏ.ஐ. பணிச்சுமைகளை குறைத்து, குறைந்த செலவில் நம்பகமான ஏ.ஐ. செயல்பாடுகளை வழங்க உதவும்.

எண்ம வா்த்தகத்துக்கு ஜோஹோ ரூ.70 கோடி முதலீடு: இந்தியாவின் ‘ஓஎன்டிசி’ எண்ம வா்த்தக அமைப்பில் எம்எஸ்எம்இ தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்காக ஜோஹோ நிறுவனம் ரூ.70 கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.