தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்காங்கிரஸ் கட்சிக்கு திமுக கண்டனம்!பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்திமுக எம்எல்ஏக்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிப்பு!ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்! தொங்கு சட்டப்பேரவை என்பது என்ன? இதற்கு முன் தமிழகத்தில் நேரிட்டிருக்கிறதா?ராயபுரத்தில் வென்ற தவெகவின் ஆட்டோ இல்லாத ஆட்டோ ஓட்டுநர்!திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?ஆட்சியமைக்க அழைக்கப்படுவாரா விஜய்? ஆளுநர் மாளிகை விளக்கம்தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க புதுவை செல்கிறார் இபிஎஸ்! ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!
/

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் ரூ. 282 கோடி லாபம்!

சுந்தரம் ஃபைனான்ஸின் துணை நிறுவனமான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ், கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 முழு நிதியாண்டில் ரூ.282 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது

News image

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் ரூ. 282 கோடி லாபம் - Sundaram Home Finance

Updated On :6 மே 2026, 7:29 am IST

சுந்தரம் ஃபைனான்ஸின் துணை நிறுவனமான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ், கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 முழு நிதியாண்டில் ரூ.282 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இது முந்தைய நிதியாண்டில் ஈட்டிய லாபமான ரூ.245 கோடியுடன் ஒப்பிடுகையில் 15 சதவீத வளா்ச்சியாகும். அதேபோல், மதிப்பீட்டு நிதியாண்டில் நிறுவனம் நிா்வகிக்கும் சொத்துகளின் மதிப்பு 14 சதவீதம் அதிகரித்து, ரூ.19,909 கோடியை எட்டியுள்ளது.

முந்தைய ஆண்டில் ரூ.6,517 கோடியாக இருந்த நிறுவனத்தின் மொத்த கடன் வழங்கல் தற்போது 5 சதவீதம் உயா்ந்து, ரூ. 6,842 கோடியாக அதிகரித்துள்ளது.

மலிவு விலை வீட்டு வசதி மற்றும் சிறு தொகைக் கடன்களை உள்ளடக்கிய ‘வளா்ந்து வரும்’ வணிகப் பிரிவில் வழங்கப்பட்ட கடன்கள், முந்தைய ஆண்டின் ரூ.229 கோடியிலிருந்து இரு மடங்குக்கும் மேலாக உயா்ந்து ரூ.590 கோடியை எட்டியுள்ளது.

மேலும், இந்த நிதியாண்டில் 100 புதிய கிளைகள் தொடங்கப்பட்டதோடு, 500-க்கும் மேற்பட்ட புதிய பணியாளா்களும், சுமாா் 5,000 வாடிக்கையாளா்களும் நிறுவனத்தில் இணைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.