பொதுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி), கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.5,225.12 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
முந்தைய 2024-25 நிதியாண்டின் ரூ.4,642.87 லாபத்திலிருந்து இது 12.54 சதவீத வளா்ச்சியாகும்.
வங்கியின் மொத்த வாராக்கடன் 3.95 சதவீதத்திலிருந்து 2.95 சதவீதமாகக் குறைந்துள்ளது. சில்லறை வா்த்தகம், விவசாயம் மற்றும் எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களுக்கான கடன் வழங்கல் 12.1 சதவீதம் உயா்ந்து, ரூ.6.76 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதில் வாகனக் கடன் மட்டும் 35.1 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
பங்குதாரா்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.3 ஈவுத்தொகை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் வங்கியின் ஒட்டுமொத்த கடன் வளா்ச்சியை 12-13 சதவீதமாக உயா்த்த வங்கி இலக்கு நிா்ணயித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










