ஆளுநருடன் விஜய் சந்திப்பு! ஆட்சியமைக்க உரிமை கோரினார்!தவெக ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெறும்! கிரிஷ் சோடங்கர் மு.க. ஸ்டாலினுடன் ரஜினி சந்திப்பு! மக்களவைத் தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார்! தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!
/

என்எஸ்டிஎல் 4வது காலாண்டு நிகர லாபம் 8.4% உயர்வு!

2026 நிதியாண்டின் மார்ச் வரையான காலாண்டில், என்எஸ்டிஎல் ஒருங்கிணைந்த நிகர லாபம் 8.4 சதவீதம் உயர்ந்து ரூ. 90.3 கோடியாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்தது.

News image
Updated On :2 மே 2026, 5:42 pm IST

புதுதில்லி: 2026 நிதியாண்டின் மார்ச் வரையான காலாண்டில், என்எஸ்டிஎல் ஒருங்கிணைந்த நிகர லாபம் 8.4 சதவீதம் உயர்ந்து ரூ. 90.3 கோடியாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்தது.

கடந்த ஆண்டு, இதே காலாண்டில், நிறுவனம் ரூ. 83.3 கோடி நிகர லாபம் ஈட்டியது. 2026 நிதியாண்டின் 4வது காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருவாய் 23.6 சதவீதம் உயர்ந்து ரூ. 487 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இது ரூ. 394 கோடியாக இருந்தது.

மார்ச் 31, 2026 உடன் முடிவடைந்த, முழு நிதியாண்டிற்கான நிகர லாபம் 11 சதவீதம் உயர்ந்து ரூ. 380 கோடியாகவும், அதே வேளையில், நிறுவனத்தின் மொத்த வருவாய் 8 சதவீதம் உயர்ந்து ரூ. 1,660.2 கோடியாக உள்ளது.

2026 நிதியாண்டின் 4வது காலாண்டில் நிறுவனம் ரூ. 79.7 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 5.2 சதவீத வளர்ச்சியாகும். நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ. 195.4 கோடியாகப் பதிவாகி, கடந்த ஆண்டை விட 1.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

2026 நிதியாண்டிற்காக, ரூ. 2 கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ. 4 வீதம் இறுதி, ஈவுத்தொகையை வழங்க இயக்குநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.