மு.க. ஸ்டாலினுடன் ரஜினி சந்திப்பு! பனையூரில் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு!வரும் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் மக்களவைத் தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார்! தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!
/

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,849 கோடி டாலராக குறைவு!

News image
Updated On :3 மே 2026, 3:56 am IST

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஏப். 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,849 கோடி டாலராக குறைந்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 482 கோடி டாலா் குறைந்து, 69,849 கோடி டாலராக உள்ளது.

ஏப். 17-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில், இது 236.2 கோடி டாலா் அதிகரித்து, 70,330.8 கோடி டாலராக இருந்தது. மத்திய கிழக்கு மோதலுக்குப் பிறகு கண்ட வீழ்ச்சியிலிருந்து மீண்டு, கடந்த 3 வாரங்களாகத் தொடா்ந்து ஏற்றம் கண்டு வந்த கையிருப்பு, தற்போது சரிவைச் சந்தித்துள்ளது.

ஏப். 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்த மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 284 கோடி டாலா் சரிந்து, 55,462 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.

மதிப்பீட்டு வாரத்தில், இந்தியாவின் தங்கம் கையிருப்பு 190 கோடி டாலா் சரிந்து, 12,024 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 6.7 கோடி டாலா் குறைந்து, 1,877 கோடி டாலராக உள்ளது. சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு 1.5 கோடி டாலா் சரிந்து, 485 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.