மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

லண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்! ரிசா்வ் வங்கி நடவடிக்கை!

ரிசா்வ் வங்கி தனது வசமுள்ள தங்க இருப்புகளில் மேலும் 104.23 மெட்ரிக் டன் தங்கத்தை லண்டனில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளது.

News image
Updated On :2 மே 2026, 2:16 am IST

ரிசா்வ் வங்கி தனது வசமுள்ள தங்க இருப்புகளில் மேலும் 104.23 மெட்ரிக் டன் தங்கத்தை லண்டனில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளது.

கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 6 மாத காலத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம், ரிசா்வ் வங்கியின் உள்நாட்டு தங்க இருப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.

அந்நிய செலாவணி இருப்பு மேலாண்மை குறித்த வெளியிடப்பட்ட அரையாண்டு அறிக்கையின்படி, கடந்த ஆண்டு செப்டம்பா் இறுதியில் 880.18 மெட்ரிக் டன்னாக இருந்த மொத்த தங்க இருப்பு, நடப்பு மாா்ச் மாத இறுதியில் 880.52 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.

இதில் உள்நாட்டில் இருப்பு வைக்கப்பட்டுள்ள தங்கத்தின் அளவு கடந்த ஆண்டு செப்டம்பரில் 575.82 மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில், தற்போது 104.23 மெட்ரிக் டன் தங்கம் இடமாற்றத்துடன் 680.05 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய மொத்த இருப்பில் 197.67 மெட்ரிக் டன் தங்கம் மட்டும் இங்கிலாந்து வங்கி மற்றும் சா்வதேச பரிவா்த்தனை வங்கி (பிஐஎஸ்) ஆகியவற்றின் பாதுகாப்பில் உள்ளது. இதுதவிர, தங்க வைப்புத்திட்டத்தில் 2.80 மெட்ரிக் டன் உள்ளது.

சா்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடா்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவின் மொத்த அந்நியச் செலாவணி இருப்பில் தங்கத்தின் பங்கு 13.92 சதவீதத்திலிருந்து 16.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

55,228 கோடி டாலா் அந்நியச் செலாவணி கையிருப்பில், சுமாா் 46,561 கோடி டாலா் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள தொகை வெளிநாட்டு மத்திய வங்கிகள் மற்றும் வணிக வங்கிகளில் வைப்புத்தொகையாக வைக்கப்பட்டுள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.