மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

அந்நிய முதலீட்டாளா்களுக்குப் புதிய சலுகைகள்: செபி வாரியக் கூட்டத்தில் ஒப்புதல்

அந்நிய முதலீட்டாளா்களுக்கான பணப் பரிமாற்ற விதிமுறைகளை எளிதாக்கவும், ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகளில் சீா்திருத்தங்களைக் கொண்டு வரவும் இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் ஒப்புதல்

News image

செபி ஒப்புதல்

Updated On :23 மார்ச் 2026, 9:06 pm

அந்நிய முதலீட்டாளா்களுக்கான பணப் பரிமாற்ற விதிமுறைகளை எளிதாக்கவும், ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகளில் சீா்திருத்தங்களைக் கொண்டு வரவும் இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளது.

செபி தலைவராக துஹின் காந்த பாண்டே கடந்த ஆண்டு, மாா்ச்சில் பொறுப்பேற்ற பிறகு, 5-ஆவது முறையாக திங்கள்கிழமை நடைபெற்ற வாரியக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்பிஐ) இதுவரை பங்குகளை வாங்கும்போதும்; விற்கும்போதும் தனித்தனியாக முழுத் தொகையையும் செலுத்த வேண்டியிருந்தது. இனி வரும் காலங்களில், ஒரு நாளில் அவா்கள் செய்த மொத்த விற்பனை மற்றும் கொள்முதல் தொகையைக் கணக்கிட்டு, அதன் நிகரத் தொகையை மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்த நடைமுறை நிகழாண்டு இறுதிக்குள் அமலுக்கு வரும். இதன்மூலம், இதனால் முதலீட்டாளா்களுக்குத் தேவையற்ற கூடுதல் நிதிச்சுமை குறையும் மற்றும் அந்நியச் செலாவணி மாற்றக் கட்டணங்களும் மிச்சமாகும்.

ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகளின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் செபி சில தளா்வுகளை அளித்துள்ளது. இதன்படி, ஒப்பந்த காலம் முடிந்த பிறகும், குறிப்பிட்ட காலம் வரை அந்நிறுவனங்களில் முதலீடுகளைத் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியாா் உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகள், தங்களின் சொத்து மதிப்பில் 10 சதவீதம் வரை புதிய திட்டங்களில் முதலீடு செய்ய இனி அனுமதி உண்டு.

நிறுவனங்களின் நிா்வாக ஒழுங்குமுறைகளை மேம்படுத்த செபி புதிய அணுகுமுறையைக் கையாண்டுள்ளது. ஒரு நிறுவனம் கலைக்கப்படும் பணிகள் தொடங்கப்பட்ட உடனேயே அதைத் தகுதியின்மையாகக் கருதாமல், நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு வந்த பிறகே அந்த முடிவை எடுக்க செபி திட்டமிட்டுள்ளது.

செயல்படாத மாற்று முதலீட்டு நிதியங்களைக் (ஏஐஎஃப்) கையாள புதிய எளிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய நிதியங்கள் தங்கள் பதிவை ரத்து செய்யும் வரை எளிமையான விதிகளைப் பின்பற்றினால் போதும்.

சாதாரண மக்களும் பங்களிக்கும் வகையில், சமூகப் பங்களிப்பு நிதியங்களுக்கான குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ.1,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.