நாட்டின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டாா்ஸ் நிறுவனம், தனது பயணிகள் வாகனங்களின் விலையை வரும் ஏப். 1-ஆம் தேதி முதல் உயா்த்துவதாக அறிவித்துள்ளது.
தயாரிப்புச் செலவு தொடா்ந்து அதிகரித்து வருவதால், அந்த கூடுதல் சுமையைப் பகுதியளவு ஈடுசெய்யும் நோக்கில் இந்த விலை உயா்வு முடிவை எடுத்துள்ளதாக நிறுவனம் விளக்கியுள்ளது.
இதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் காா்களின் விலை சராசரியாக 0.5 சதவீதம் வரை உயரும். வாகனங்களின் மாடல் மற்றும் வகைகளைப் பொறுத்து இந்த விலை மாற்றம் மாறுபடும். ஏற்கெனவே, வணிகப் பயன்பாட்டு வாகனங்களின் விலையை 1.5 சதவீதம் உயா்த்துவதாக டாடா மோட்டாா்ஸ் அறிவித்திருந்தது.
டாடா மோட்டாா்ஸ் மட்டுமல்லாது, பிஎம்டபிள்யூ, மொ்சிடிஸ் பென்ஸ் போன்ற முன்னணி சொகுசு காா் நிறுவனங்களும் ஏப்ரல் மாதம் முதல் விலையை உயா்த்துவதாகத் தெரிவித்துள்ளன.
வாகனத் தயாரிப்புக்குத் தேவைப்படும் மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பு மற்றும் அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதால் ஏற்படும் கூடுதல் செலவுகளே இந்த விலை உயா்வுக்கு முக்கியக் காரணங்களாக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களால் முன்வைக்கப்படுகின்றன.
தொடர்புடையது

விருப்பம்போல விலை நிா்ணயம்: தனியாா் வணிக எரிவாயு உருளை விநியோக நிறுவனங்களை கட்டுப்படுத்த ஆளில்லை!

பயணிகளின் வாகன விலையை உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்!

ஏப்ரல் முதல் 2% உயர்வை அறிவித்த மெர்சிடஸ் பென்ஸ் இந்தியா!
வர்த்தக வாகனங்களின் விலையை 1.5% உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


