மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பயணிகளின் வாகன விலையை உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்!

பயணிகளின் வாகனங்களின் விலையை ஏப்ரல் 1, 2026 முதல் உயர்த்தப் போவதாக டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் நிறுவனம் இன்று அறிவித்தது.

News image
Updated On :20 மார்ச் 2026, 1:35 pm

புதுதில்லி: அதிகரித்து வரும் செலவுகளைக் காரணம் காட்டி, ஏப்ரல் 1, 2026 முதல் பயணி வாகனங்களின் விலையை உயர்த்தப் போவதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்று அறிவித்தது.

வாகனத்தின் சராசரி விலை உயர்வு 0.5 சதவீதமாக இருக்கும் என்றும், வாகனத்தின் அளவு, மாடல்கள் பொறுத்தே இந்த விலை உயர்வு மாறுபடும் என்றது.

தொடர்ந்து அதிகரித்து வரும் உள்ளீட்டுச் செலவுகள், தளவாடங்கள் மற்றும் பிற செயல்பாட்டுகளை ஓரளவு ஈடுசெய்வதற்காக இந்த விலை மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக நிறுவனம் தெரிவித்தது.

டாடா மோட்டார்ஸ், ஹேட்ச்பேக் - டியாகோ முதல் சஃபாரி - எஸ்யூவி வரையிலான பல்வேறு வாகனங்களை ரூ. 4.57 லட்சம் முதல் ரூ. 23.42 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்து வருகிறது.

இதற்கிடையில், பல சவால்களை எதிர்கொள்ளும் பிற வாகன உற்பத்தியாளர்கள், வாகனங்களின் விலை உயர்வை நடைமுறைப்படுத்தியும் அல்லது பரிசீலித்து வருகின்றனர்.

Summary

Tata Motors Passenger Vehicles Ltd on Friday said it will hike prices of its passenger vehicles from April 1, 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.