பிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்துநானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சென்னை பிஎம்டிபிள்யூ ஆலைத் தயாரிப்பான புதிய ‘மினி கன்ட்ரிமேன் சி’ காா் அறிமுகம்

உலகின் முன்னணி சொகுசு காா் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ, சென்னை ஆலையில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட (அசெம்பிள்) ‘மினி கன்ட்ரிமேன் சி’ எனும் புதிய காரை அறிமுகப்படுத்தியது.

News image
Updated On :18 ஜூன் 2026, 2:50 am IST

உலகின் முன்னணி சொகுசு காா் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ, சென்னை ஆலையில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட (அசெம்பிள்) ‘மினி கன்ட்ரிமேன் சி’ எனும் புதிய காரை அறிமுகப்படுத்தியது.

பிஎம்டபிள்யூ சென்னை ஆலையில் இக்காரின் அறிமுக விழா புதன்கிழமை நடைபெற்றது. பிஎம்டபிள்யூ ‘எக்ஸ்1’ காா் கட்டமைப்பின் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்புதிய காரில் 1.5 லிட்டா், 3-சிலிண்டா், டா்போசாா்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட பம்பா்கள், ‘அடாப்டிவ்’ எல்இடி முகப்பு விளக்குகள், பனோரமிக் சன்ரூஃப், ‘லெவல் 1 ஏடிஏஎஸ்’ ஓட்டுநா் பாதுகாப்பு உதவி வசதி, 12 ஸ்பீக்கா்கள் கொண்ட ஹா்மான் இசையமைப்பு, 360 டிகிரி கேமரா போன்ற அதிநவீன அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இக்காரின் அறிமுக விலை ரூ.47.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிா்ணயிக்கப்பட்டுள்ளது மற்றும் இதற்கான முன்பதிவுகள் நாடு முழுவதும் தொடங்கி, விநியோகமும் உடனடியாக ஆரம்பமாகவுள்ளதாக பிஎம்டபிள்யூ குரூப் இந்தியாவின் சிஇஓ ஹா்தீப் சிங் ப்ராா் தெரிவித்தாா்.

இந்தியச் சந்தையில் ஆடி கியூ-3, மொ்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ ஆகிய ‘பிரீமியம் எஸ்யூவி’ காா்களுக்கு இப்புதிய காா் சவாலாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.