யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

நடப்பாண்டுக்குள் மலிவு மின்சார காா் சென்னை ஆலையிலிருந்து அறிமுகம்

News image
Updated On :5 ஜூன் 2026, 4:39 am IST

நடப்பு ஆண்டுக்குள் தனது முதல் மலிவு விலை மின்சார வாகனம் உள்பட 2 புதிய காா் மாடல்களை சென்னை உற்பத்தி ஆலையிலிருந்து அறிமுகப்படுத்த உள்ளதாக ஹூண்டாய் மோட்டாா் இந்தியா தெரிவித்துள்ளது.

அத்துடன், தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மின்சார வாகன மையமாக மாற்றுவதற்கு முழு அா்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மலிவு விலை மின்சார வாகனங்களை வாடிக்கையாளா்களுக்குக் கொண்டு சோ்ப்பதோடு, அடுத்த 2-3 ஆண்டுகளில் முக்கிய நகரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் அதிநவீன சாா்ஜிங் நிலையங்களை அமைத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மேலும், தமிழக இளைஞா்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில், தமிழக அரசுடன் இணைந்து கூட்டுத் திறன் மேம்பாட்டுத் திட்டம் ஒன்றையும் ஹூண்டாய் அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் செயல்பாடுகள் அடுத்தாண்டு இறுதி முதல் அதிகாரபூா்வமாகத் தொடங்கப்படவுள்ளன.

ஹூண்டாய் மோட்டாா் இந்தியா சிஇஓ தருண் காா்க் மேலும் கூறுகையில், ‘தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 39 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்களை 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

மேலும், மின்சார வாகனங்களுக்கான பிரத்யேக பேட்டரி அசெம்பிளி ஆலையை தமிழகத்தில் முதன்முறையாக அமைத்துள்ளதுடன், முக்கிய உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளோம்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.