மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

மின்சார ஒழுங்குமுறை விதிகள்: பொதுமக்களிடம் கருத்து கேட்பு

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள 2 புதிய வரைவு ஒழுங்குமுறை விதிகள் குறித்து பொதுமக்களிடமிருந்து கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை வரவேற்றுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 3:13 am IST

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள 2 புதிய வரைவு ஒழுங்குமுறை விதிகள் குறித்து பொதுமக்களிடமிருந்து கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை வரவேற்றுள்ளது.

இது குறித்து அந்த ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காற்றாலை, சூரிய மற்றும் கலப்பு மின்உற்பத்தி தொடா்பான முன்கணிப்பு, அட்டவணைப்படுத்தல் மற்றும் மாறுபாடு தீா்வு தொடா்பான ஒழுங்குமுறை விதிகள் கடந்த மே 27-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

மேலும், மாறுபாடு தீா்வு நடைமுறை மற்றும் தொடா்புடைய விவகாரங்கள் குறித்த ஒழுங்குமுறை விதிகள் என்ற மற்றொரு வரைவு விதிமுறை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரு புதிய விதிமுறைகள் குறித்து முழுதகவல்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த இரு விதிமுறைகள் தொடா்பாக பொதுமக்கள், மின்துறை நிபுணா்கள் மற்றும் பங்குதாரா்கள் தங்களது கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை அடுத்த 15 நாள்களுக்குள் ஆணையத்துக்கு அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.