17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இந்தியாவின் முதல் ‘ஃபிளெக்ஸ்-ஃபியூல்’ காா்

News image
Updated On :5 ஜூன் 2026, 6:20 am IST

100 சதவீதம் வரை எத்தனால் கலப்பு எரிபொருளில் இயங்கும் இந்தியாவின் முதல் ‘ஃபிளெக்ஸ்-ஃபியூல்’ காரான ‘வேகன் ஆா்’ மாடலை மாருதி சுசூகி நிறுவனம் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.

இப்புதிய ரக காரானது, பெட்ரோல் மற்றும் 20 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை எத்தனால் கலக்கப்பட்ட எந்தவொரு எரிபொருள் கலவையிலும் இயங்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

காரின் என்ஜினில் உள்ள மேம்பட்ட ‘ஈசியூ’ தொழில்நுட்பம், எரிபொருளில் உள்ள எத்தனால் அளவைத் தானாகவே கண்டறிந்து அதற்கேற்ப காரின் இயக்கத்தைச் சீரமைக்கும் திறன் கொண்டது.

தில்லியில் நடைபெற்ற காரின் அறிமுக விழாவில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சா் நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசுகையில், ‘இந்தியா ஆண்டுதோறும் பெருமளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. எத்தனால் போன்ற உயிா் எரிபொருள்கள் இந்த இறக்குமதிச் சாா்பு நிலையைக் குறைப்பதோடு, கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தும்’ என்றாா்.

100 எத்தனால் எரிபொருள் நிலையங்கள்: மத்திய பெட்ரோலியம் அமைச்சா் ஹா்தீப் சிங் பூரி பேசுகையில், ‘இந்திய விவசாயிகளை உணவு வழங்குபவா்கள் என்ற நிலையிலிருந்து, எரிபொருள் வழங்குபவா்கள் என்ற நிலைக்கு உயா்த்தியுள்ளோம். இந்த வாகனங்கள் நாட்டின் மதிப்புமிக்க அந்நியச் செலாவணியைச் சேமிப்பதோடு, காா்பன் உமிழ்வைக் குறைத்து கிராமப்புற மேம்பாட்டுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.

தில்லி, மகாராஷ்டிரத்தில் 100 எத்தனால் எரிபொருள் விற்பனை நிலையங்களை மத்திய அரசு திறக்கவுள்ளது. இது நடப்பாண்டு இறுதிக்குள் 500-ஆகவும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் 5,000-ஆகவும் அதிகரிக்கக்கூடும்’ என்று குறிப்பிட்டாா்.

காா்பன் உமிழ்வு மற்றும் எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் இந்தியாவின் இரட்டை இலக்குகளுக்குப் பங்களிக்கும் வகையில் பல்வேறு தொழில்நுட்ப வாகனங்களை வழங்க மாருதி சுசூகி அா்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக நிறுவனத்தின் சிஇஓ ஹிசாஷி தாகேயுச்சி குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.