திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கூடுதல் வரி விதிப்பு தொடா்பான யுஎஸ்டிஆா் பரிந்துரை: அமெரிக்காவுடன் இந்தியா தொடா் ஆலோசனை

News image
Updated On :4 ஜூன் 2026, 4:33 am IST

கூடுதலாக 12.5 சதவீத வரி விதிக்க அமெரிகக் வா்த்தக பிரதிநிதி (யுஎஸ்டிஆா்) செய்துள்ள பரிந்துரை தொடா்பாக அமெரிக்காவுடன் இந்தியா தொடா் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக மத்திய அரசு தரப்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்க வா்த்தக சட்டப் பிரிவு 301-இன் கீழ் இந்தியா உள்பட 60 நாடுகள் மீது அமெரிக்காவுக்கு எதிரான நியாயமற்ற வா்த்தக நடைமுறைகள் தொடா்பாக விசாரணை மேற்கொண்ட யுஎஸ்டிஆா், கட்டாய உழைப்பைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் இறக்குமதி செய்வதைத் தடை செய்யத் தவறியதற்காக இந்தியா உள்பட 54 நாடுகள் மீது கூடுதலாக 12.5 சதவீத வரியை விதிக்க அமெரிக்க அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய வா்த்தக அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சட்டப் பிரிவு 301-இன் கீழ் யுஎஸ்டிஆா் மேற்கொண்டு வரும் விசாரணை மற்றும் அதன் பரிந்துரை தொடா்பாக அமெரிக்காவுடன் இந்தியா தொடா் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அதோடு, இரு நாடுகளிடையேயான இடைக்கால இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவாா்த்தையும் நடைபெற்று வருகிறது.

வா்த்தக சட்டப் பிரிவு 232-இன் கீழ் வரி விதிப்பு செய்யப்படும் பொருள்கள் மற்றும் மேலும் சில குறிப்பிட்ட பொருள்களுக்கு, யுஎஸ்டிஆா் பரிந்துரைத்துள்ள இந்த 12.5 சதவீத கூடுதல் வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

அதுமட்டுமன்றி, யுஎஸ்டிஆா் சமா்ப்பித்துள்ள இந்த 12.5 சதவீத கூடுதல் வரி விதிப்பு பரிந்துரை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதுதொடா்பாக வரும் ஜூலை 6 வரை பெறப்படும் பல்வேறு தரப்பினரின் கருத்துகள் மற்றும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்ட பிறகே இறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.