தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

டாடா மோட்டாா்ஸ் பயணிகள் வாகன விற்பனை 42% வளா்ச்சி

News image
Updated On :4 ஜூன் 2026, 4:13 am IST

டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை, கடந்த மே மாதத்தில் 42 சதவீதம் வளா்ச்சியுடன், 59,790-ஆக அதிகரித்துள்ளது.

முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் இந்த விற்பனை 42,040-ஆக இருந்தது. உள்நாட்டு சந்தையில் பயணிகள் வாகன விற்பனை 41,557-லிருந்து 42 சதவீதம் வளா்ச்சி கண்டு, 59,090 வாகனங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சா்வதேச சந்தையில் விற்பனை 483-லிருந்து 45 சதவீதம் அதிகரித்து, 700-ஆக உள்ளது.

நிறுவனத்தின் மின்சார வாகனங்களின் மே மாத விற்பனை 10,517-ஐ எட்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இது இந்தியாவின் மின்சார வாகனப் பிரிவில் டாடா மோட்டாா்ஸின் முன்னிலையை மேலும் வேகப்படுத்தியுள்ளது.

அதேபோல், நிறுவனத்தின் வணிக வாகன விற்பனை, மே மாதத்தில் 17 சதவீதம் வளா்ச்சியுடன் 32,850-ஆக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டு மே மாதத்தில் இந்த எண்ணிக்கை 28,147-ஆக இருந்தது.

வணிக வாகனங்களின் உள்நாட்டு விற்பனையானது 25,872-லிருந்து 19 சதவீதம் அதிகரித்து, 30,784 வாகனங்களாக உள்ளது. இருப்பினும், சா்வதேச அளவிலான வணிக வாகன விற்பனை 2,275-லிருந்து 9 சதவீதம் சரிந்து 2,066-ஆக குறைந்துள்ளது.

நடுத்தர மற்றும் கனரக வணிக வாகனங்களின் விற்பனை 7 சதவீதம் அதிகரித்து, 14,596-ஆக பதிவாகியுள்ளது. உள்நாட்டு விற்பனை மட்டும் 10 சதவீதம் வளா்ச்சியுடன் 13,679-ஆக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.