ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ. 95.66 ஆக நிறைவு!

இன்றைய வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ. 95.66 ஆக நிலைபெற்றது.

இந்திய ரூபாய்

Published On :29 ஜூலை 2026, 5:50 pm IST

மும்பை: உள்நாட்டுப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட தீவிரமான கொள்முதல் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவு உள்ளிட்டவையால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய வர்த்தகத்தில், 16 காசுகள் உயர்ந்து ரூ. 95.66 ஆக நிறைவடைந்தன. இதன் மூலம் தொடர்ந்து 4 வது வர்த்தக நாளாக ரூபாய் மதிப்பு உயர்வு கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகாரன ரூபாய் மதிப்பு ரூ. 95.70 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கிய, ஒரு கட்டத்தில் ரூ. 95.80 என்ற குறைந்தபட்ச அளவை எட்டியது. பிறகு ரூ. 95.48 என்ற அதிகபட்ச அளவை எட்டிய நிலையில், வர்த்தக முடிவில் அதன் முந்தைய நாள் நிலையை விட 16 காசுகள் உயர்ந்து ரூ. 95.66 ஆக நிலைபெற்றது.

தொடர்ந்து இரண்டு முந்தைய வர்த்தக அமர்வுகளில் 74 காசுகள் வரை உயர்ந்திருந்த நிலையில், நேற்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் அதிகரித்து ரூ. 95.82 ஆக நிலைபெற்றது.

Summary

The rupee rose 16 paise to 95.66 against dollar on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.