டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஜப்பானிய வங்கிக்கு ஆர்பிஐ ஒப்புதல்!

இந்தியாவில் முழு உரிமையுடனான ஒரு துணை நிறுவனத்தை அமைப்பதற்கு கொள்கை ரீதியான ஒப்புதல் வழங்கியுள்ளது ஆர்பிஐ.

News image
ஆர்பிஐ (கோப்புப் படம்)- ENS
Updated On :14 ஜனவரி 2026, 2:44 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: ரிசர்வ் வங்கியானது, ஜப்பானைச் சேர்ந்த சுமிடோமோ மிட்சுய் பேங்கிங் கார்ப்பரேஷன் (SMBC) இந்தியாவில் முழு உரிமையுடனான ஒரு துணை நிறுவனத்தை அமைப்பதற்கு கொள்கை ரீதியான ஒப்புதல் வழங்கியுள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

எஸ்எம்பிசி நிறுவனம், புதுதில்லி, மும்பை, சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள தனது 4 கிளைகள் மூலம் இந்தியாவில் வங்கித் தொழிலை நடத்தி வருகிறது.

இந்தியாவில் உள்ள அதன் தற்போதைய கிளைகளை மாற்றி, முழு உரிமையுடைய துணை நிறுவனத்தை அமைப்பதற்காகவே இந்த கொள்கை ரீதியான ஒப்புதலை வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2025ல், எஸ்எம்பிசி நிறுவனம், யெஸ் வங்கியில் 24.22% பங்குகளைப் கையகப்படுத்தி, அதன் மிகப்பெரிய பங்குதாரராக உருவெடுத்தது. அதே நேரத்தில், எஸ்பிஐ வங்கியிடம் 10 சதவீதத்திற்கும் அதிகமான அதன் பங்குகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The Reserve Bank of India has granted in-principle approval to (SMBC) Japan, for setting up a wholly owned subsidiary in India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.