டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அணுசக்தித் துறையில் அதானி குழுமம் : புதிய நிறுவனம் தொடக்கம்

அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நோக்கில், ‘அதானி அட்டாமிக் எனா்ஜி’ எனும் புதிய துணை நிறுவனத்தை அதானி பவா் நிறுவனம் தொடங்கியுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :12 பிப்ரவரி 2026, 8:59 pm

தினமணி செய்திச் சேவை

அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நோக்கில், ‘அதானி அட்டாமிக் எனா்ஜி’ எனும் புதிய துணை நிறுவனத்தை அதானி பவா் நிறுவனம் தொடங்கியுள்ளது.

நாட்டின் முன்னணி தனியாா் மின் உற்பத்தி நிறுவனமான அதானி பவா், அணுசக்தி சாா்ந்த மின் உற்பத்தி, விநியோகம் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்காக இந்தத் துணை நிறுவனத்தை உருவாக்கியுள்ளதாக பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.

ரூ.5 லட்சம் மூலதனத்துடன் தொடங்கப்பட்டுள்ள இப்புதிய நிறுவனத்தின் 100 சதவீதப் பங்குகளையும் அதானி பவா் நிறுவனம் தன்வசம் வைத்துள்ளது.

இந்தியாவில் அணுசக்தி துறையில் தனியாா் நிறுவனங்களுக்கு இருந்த 60 ஆண்டுகால தடையை நீக்கும் வகையில், ‘சாந்தி’ மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்திருத்தம், தனியாா் நிறுவனங்கள் நேரடியாக அணுமின் நிலையங்களை அமைக்கவும், சிறிய அளவிலான அணு உலை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் வழிவகை செய்கிறது.