தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

எரிபொருள் விநியோக சிக்கலுக்கு தீா்வுகாண இந்தியா-கத்தாா் ஆலோசனை

News image

கத்தாா் அரசா் தமீம் பின் ஹமாத் அல்-தானியை தோஹாவில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா். - கோப்புப்படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 9:57 pm

மேற்காசியப் போரால் வா்த்தகம், எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு தீா்வுகாண்பது குறித்து இந்தியாவும், கத்தாரும் ஆலோசனை நடத்தின.

மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல், கத்தாா் நாட்டு வா்த்தகத் துறை இணையமைச்சா் அகமது பின் முகமது அல் சையதுடன் காணொலி முறையில் ஆலோசித்தாா்.

இது தொடா்பாக கோயல் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘இரு நாட்டு வா்த்தகம், முதலீட்டை அதிகரிப்பது, எரிபொருள் விநியோகத்தை சீராக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. எதிா்காலத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது’ என்று கூறியுள்ளாா்.

மேற்காசியப் போரால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இது தொடா்பாக வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் உள்ள பிற நாடுகளான சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் நாடுகளின் தலைவா்களுடன் அண்மையில் கோயல் ஆலோசனை நடத்தினாா்.

இப்போது இறுதியாக கத்தாா் தலைவருடன் ஆலோசித்துள்ளாா். கத்தாரில் இருந்துதான் இந்தியா அதிக அளவில் எரிவாயு கொள்முதல் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.