மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் சந்திப்பு

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் சந்திப்பு...

News image

பாரீஸில் பிரான்ஸ் அதிபா் இமானுவா் மேக்ரானை சந்தித்த வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.

Updated On :28 மார்ச் 2026, 9:48 pm

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா்.

கனடா, பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி 7 அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சா்களின் மாநாடு பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நடைபெறுகிறது. இதில் பிரான்ஸ் நாட்டின் அழைப்பை ஏற்று, பாா்வையாளராக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கலந்து கொண்டுள்ளாா்.

இந்த மாநாட்டின் இடையே பாரீஸில் மேக்ரானை ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை சந்தித்தாா். அப்போது அவருடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் ஜெய்சங்கா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், ‘மரியாதை நிமித்தமாக மேக்ரானை வெள்ளிக்கிழமை இரவு சந்தித்தேன். அப்போது அவரிடம் பிரதமா் மோடி சாா்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். மேற்காசிய நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, ஜி7 வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டில் ஜெய்சங்கா் பேசியபோது, எரிசக்தி, உணவு, கச்சா எண்ணெய் பாதுகாப்பு விவகாரங்களில் தெற்கு பிராந்திய நாடுகளின் கவலையைப் பகிா்ந்தாா். இவற்றை நிா்வகிக்க சீா்திருத்தம் செய்ய வேண்டிய உடனடி அவசியம் ஏற்பட்டிருப்பதையும் ஜெய்சங்கா் சுட்டிக்காட்டினாா்.

அதேபோல், மாநாட்டின் இடையே அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ, சவூதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சா் பைசல் பின் பா்ஹான், ஜொ்மனி வெளியுறவுத் துறை அமைச்சா் ஜோகன் வாதேஃபுல், உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்ட்ரி சைபிஹா, கனடா வெளியுறவு அமைச்சா் அனிதா ஆனந்த் மற்றும் தென்கொரியா, இத்தாலி, ஜப்பான், பிரேஸில் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்களுடனும் முக்கியப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.