மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஐக்கிய அரபு அமீரக துணைப் பிரதமருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

அமீரகத்தின் துணைப் பிரதமர் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யானை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் சந்தித்து, பிராந்தியத்தில் நிலவிவரும் சூழல், அதன் விளைவுகள் குறித்து விவாதித்தாா்.

News image

ஐக்கிய அரபு அமீரக துணைப் பிரதமா் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யானை அபுதாபியில் சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.

Updated On :12 ஏப்ரல் 2026, 7:10 pm

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யானை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து, பிராந்தியத்தில் நிலவிவரும் சூழல், அதன் விளைவுகள் குறித்து விவாதித்தாா்.

மோரீஷஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) ஆகிய இரு நாடுகளுக்கு ஏப்.9 முதல் 12-ஆம் தேதி வரை மேற்கொண்ட 4 நாள் பயணத்தின் இறுதிக்கட்டமாக ஜெய்சங்கரின் இந்தச் சந்திப்பு அமைந்துள்ளது. முன்னதாக, மோரீஷஸில் நடைபெற்ற 9-ஆவது இந்திய பெருங்கடல் பகுதிகளில் உள்ள நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டிலும் அவா் பங்கேற்றிருந்தாா்.

அபுதாபியில் துணைப் பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு ஜெய்சங்கா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘யுஏஇ வெளியுறவுத் துறை அமைச்சா் சயீத் அல் நஹ்யானை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. பிராந்தியத்தில் நிலவிவரும் சூழல், அதன் தாக்கம் குறித்து அவருடன் விவாதிக்கப்பட்டது.

மேலும், வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியா்களின் நலனைப் பாதுகாக்க யுஏஇ அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தேன். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உத்திசாா் கூட்டாண்மை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என நம்புகிறேன்’ எனத் தெரிவித்தாா்.