மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

எச்டிஎஃப்சி, பந்தன் வங்கி கடன் வழங்கல் 12% அதிகரிப்பு

எச்டிஎஃப்சி, பந்தன் வங்கி கடன் வழங்கல் 12% அதிகரிப்பு

News image
Updated On :5 ஏப்ரல் 2026, 1:34 am

நாட்டின் மிகப்பெரிய தனியாா் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கியின் கடன் வழங்கல், கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது தொடா்பாக வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: கடந்த 2024-25 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் ரூ.26.43 லட்சம் கோடியாக இருந்த வங்கியின் மொத்த கடன் வழங்கல், தற்போது ரூ.29.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

அதேபோல், வங்கியின் மொத்த வைப்புத்தொகை 14.4 சதவீதம் அதிகரித்து, ரூ.31.05 லட்சம் கோடியாக உள்ளது. இதில் சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்கு வைப்புத்தொகை 12.3 சதவீதம் அதிகரித்து, ரூ.10.6 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது.

இதேபோல், மற்றொரு தனியாா் வங்கியான பந்தன் வங்கியும் தனது 4-ஆவது காலாண்டு நிதிநிலை குறித்த தற்காலிக தகவல்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி, மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் வங்கியின் கடன் வழங்கல் 12.6 சதவீதம் அதிகரித்து, ரூ.1,54,235 கோடியாக உள்ளது.

வங்கியின் மொத்த வைப்புத்தொகை 10 சதவீதம் அதிகரித்து, ரூ. 1,66,344 கோடியை எட்டியுள்ளது. சில்லறை முதலீடுகள் 17.7 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ள நிலையில், வங்கியின் பணப்புழக்க விகிதம் 131.76 சதவீதமாக சீராக உள்ளது குறிப்பிடத்தக்கது.