ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

டாலருக்கு நிகரான ரூபாய் 24 காசுகள் உயர்ந்து ரூ.85.48 ஆக முடிவு!

வலுவான அந்நிய வரவுகள் மற்றும் உறுதியான உள்நாட்டு பங்குச் சந்தைகளின் பின்னணியில் டாலருக்கு நிகரான ரூபாய் 24 காசுகள் உயர்ந்து ரூ.85.48 ஆக நிறைவடைந்தது.

News image

PTI Graphics

Updated On :27 ஜூன் 2025, 1:33 pm

மும்பை: வலுவான அந்நிய வரவுகள் மற்றும் உறுதியான உள்நாட்டு பங்குச் சந்தைகளின் பின்னணியில் வெள்ளிக்கிழமை டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 24 காசுகள் உயர்ந்து ரூ.85.48 ஆக நிறைவடைந்தது.

கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட ஏற்றம் இந்திய ரூபாயின் லாபத்தை குறைத்த போதிலும், அமெரிக்க டாலரின் குறியீடு சரிந்த நிலையில், இந்திய ரூபாய்க்கு இது சாதகமாக அமைந்தது என்று அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.50 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு ரூ.85.43 முதல் ரூ.85.65 என்ற வரம்பில் வர்த்தகமான நிலையில், முந்தைய முடிவை விட 24 காசுகள் உயர்ந்து ரூ.85.48ஆக நிறைவடைந்தது.

நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 36 காசுகள் உயர்ந்து ரூ.85.72 ஆக நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.