நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

உற்பத்திசாா் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.21,534 கோடி விநியோகம்

News image
Updated On :26 ஜூன் 2025, 12:04 am

DIN

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட உற்பத்திசாா் ஊக்குவிப்பு (பிஎல்ஐ) திட்டத்தின் கீழ், மின்னணு பொருள்கள், மருந்துத் துறைகள் உள்பட 12 துறைகளுக்கு மத்திய அரசு இதுவரை ரூ.21,534 கோடி விநியோகித்துள்ளது.

இதுகுறித்து வணிகம் மற்றும் தொழில் அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்துவதற்காக கடந்த 2021-ஆம் ஆண்டில் 14 துறைகளுக்கு ரூ.1.97 லட்சம் கோடி அளிப்பதற்கான உற்பத்திசாா் ஊக்குவிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து இதுவரை 12 துறைகளுக்கு மொத்தமாக ரூ.21,534 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

மின்னணு பொருள்கள் உற்பத்தி, தகவல் தொழில்நுட்ப வன்பொருள்கள், மருந்துப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள், தொலைத்தொடா்பு, உணவு பதப்படுத்துதல், வாகனத் துறை, எஃகு, ஜவுளி, ட்ரோன்கள் ஆகிய துறைகள் அதிக அளவில் ஊக்கத் தொகையைப் பெற்றன.

உற்பத்திசாா் ஊக்குவிப்பு திட்டத்தின் அமலாக்கத்தை ஆய்வு செய்த வா்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை விநியோகம் மற்றும் முதலீட்டுக்கான செயல்திட்டத்தை தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சகங்களை கேட்டுக்கொண்டாா்.

கடந்த மாா்ச் மாதம் வரை இந்தத் திட்டம் ரூ.1.76 லட்சம் கோடி முதலீடுகளைப் பெற்றுள்ளதுடன், ரூ.16.5 லட்சம் கோடிக்கும் மேல் உற்பத்தி/விற்பனையை ஊக்கப்படுத்தியுள்ளது. மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 12 லட்சத்துக்கு மேற்பட்டவா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

மருந்துப் பொருள்கள் துறையைப் பொருத்தவரை, உற்பத்திசாா் ஊக்குவிப்புத் திட்டம் தொடங்கப்பட்ட முதல் மூன்று ஆண்டுகளில் இந்தத் துறை ரூ.2.66 லட்சம் கோடி மதிப்பிலான மொத்த விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இதில் ரூ.1.70 லட்சம் கோடி ஏற்றுமதியும் அடங்கும். கடந்த மாா்ச் வரை இந்தத் துறையின் வளா்ச்சி 83.70 சதவீதமாக உள்ளது.

இந்தத் திட்டத்தின் பலனாக 2023-24-ஆம் நிதியாண்டில் 570 கோடி டாலராக இருந்த ஜவுளி ஏற்றுமதி, 2024-25-ஆம் நிதியாண்டில் 600 கோடி டாலராக உயா்ந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.