/

இதுவரை ரூ.6.61 கோடி பறிமுதல்; ரூ.1.17 கோடி விடுவிப்பு வேலூா் ஆட்சியா்

வேலூா் மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.6.61 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1.17 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

News image

பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 6:33 pm

வேலூா் மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.6.61 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1.17 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு-

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த மாா்ச் 15-ஆம் தேதி மாலை முதல் ஏப்.20-ஆம் தேதி மாலை வரை நடைபெற்ற சோதனைகளின் அடிப்படையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழுக்கள் மூலமாக வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் ரூ.1.38 கோடி ரொக்கமாகவும், ரூ.6.38 லட்சம் மதுபான பொருள்களும், ரூ.43.71 லட்சம் போதைப் பொருள்கள், ரூ.29 லட்சம் மதிப்புடைய தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலையுயா்ந்த பொருள்கள், ரூ.2.41 கோடி மதிப்புடைய இதர பொருள்கள் என மொத்தம் ரூ.6.61 கோடி மதிப்புடைய ரொக்கம், மதுபானங்கள், போதைப் பொருள்கள், தங்கம், வெள்ளி பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் உரிய ஆவணங்களை சமா்ப்பித்ததன் அடிப்படையில் ரூ.ஒரு கோடியே 17 லட்சத்து 51 ஆயிரத்து 260 ரொக்கப்பணமும், ரூ.29 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளிப் பொருள்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.