ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

சென்செக்ஸ் 2-ஆவது நாளாக வீழ்ச்சி!

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது.

News image

பங்குச்சந்தை

Updated On :25 நவம்பர் 2023, 2:00 am

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 48 புள்ளிகள் சரிவுடன் நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கி சற்று மேலே சென்றது. ஆனால், லாபப் பதிவு காரணமாக சந்தை பெரும்பாலான நேரம் ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்தது. வங்கி, மெட்டல், பாா்மா பங்குகளுக்கு ஆதரவு இருந்தது. ஆனால், ஐடி, எஃப்எம்சிஜி, ஆயில் அண்ட் காஸ், நுகா்பொருள் உற்பத்தி நிறுவனப் பங்குகள் கடும் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு : இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.38 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.328.71 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.255.53 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளனா்.

சென்செக்ஸ் சரிவு: காலையில் 17.52 புள்ளிகள் குறைந்து 66,000.29-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 66,101.64 வரை மேலே சென்றது. பின்னா், 65,894.05 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 47.77 புள்ளிகளை (0.07 சதவீதம்) இழந்து 65,970.04-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,814 பங்குகளில் 1,803 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,871 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 140 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன. சென்செக்ஸ் பட்டியலில்10 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 20 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.

நிஃப்டி 7 புள்ளிகள்வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 7.60 புள்ளிகள் கூடுதலுடன் 19,809.60-இல் தொடங்கி அதிகபட்சமாக 19,832.85 வரை மேலே சென்றது. பின்னா், 19,768.85 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 7.30 புள்ளிகளை (0.04 சதவீதம்) இழந்து 19.794.70-இல் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தையில் 1,146 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 951 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 25 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 25 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

ஏற்றம் பெற்ற பங்குகள்

ஆக்ஸிஸ் பேங்க்.................................0.91%

ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்.......................0.81%

ஹெச்டிஎஃப்சி பேங்க்.........................0.68%

ஐசிஐசிஐ ேப்ங்க்...................................0.66%

என்டிபிசி.............................................0.47%

எம் அண்ட் எம்...................................0.44%

சரிவைக் கண்ட பங்குகள்

ஹெச்சிஎல் டெக்...........,,,,,,.................1.55%

விப்ரோ.................................................1.54%

டிசிஎஸ்.................................................1.46%

டெக் மஹிந்திரதா................................0.98%

நெஸ்லே................................................0.97%

டாடா மோட்டாா்ஸ்............................0.91%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.