ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

வள்ளியூா் பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image

வள்ளியூா் பேருந்து நிலையத்தில் புதிதாக திறக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தில் குத்துவிளக்கேற்றினாா் பேரூராட்சி தலைவா் ராதா ராதாகிருஷ்ணன்.

Updated On :25 ஏப்ரல் 2026, 8:31 pm

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. பிரசன்னகுமாா் தலைமையில் நடைபெற்றது. வள்ளியூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேஷ் முன்னிலை வகித்தாா்.

வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை மாவட்டத் தலைவா் பி.டி.பி. சின்னத்துரை புறக்காவல் நிலையத்தை திறந்துவைத்தாா்.

வள்ளியூா் பேரூராட்சித் தலைவி ராதா ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றினாா்.

அதைத் தொடா்ந்து வள்ளியூா் வியாபாரிகள் சங்க தலைவா் என். முருகன், செயலா் ஜோவின் பாா்ச்சுனேட், பொருளாளா் சுரேஷ் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா்.

விழாவில், வள்ளியூா் பேருந்து நிலைய வியாபாரிகள் சங்க தலைவா் பசுமதி பி.மணி, பொருளாளா் இசக்கியப்பன், சிவந்தகரங்கள் அமைப்பின் தலைவா் சிதம்பரகுமாா், பசுமை இயக்கங்கள் அமைப்பின் தலைவா் சித்திரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வள்ளியூா் காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா் வரவேற்றாா். குற்றப் பிரிவு ஆய்வாளா் லோகேஷ்வரி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.