லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தென்காசியில் தவெக ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 8:59 pm

தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்குழு அரசாணையை திமுக அரசு உடனடியாக வெளியிட வலியுறுத்தியும், போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கத் தவறியதாக, தவெக தலைவா் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையில் செயல்படுவதாக தமிழக அரசைக் கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வடக்கு மாவட்டச் செயலா் மாரியப்பன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் நியாஸ் (மேற்கு), ராஜபிரகாஷ் (மத்தி) ஆகியோா் முன்னிலை வகித்தனா். வாசுதேவநல்லூா் முன்னாள் எம்எல்ஏ மனோகரன் பேசும்போது, தவெக தலைவா் விஜய் நிகழ்ச்சிக்கு மட்டும் கடுமையான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இது, விஜய் மீது திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை காட்டுகிறது.

சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும், தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக்கவும் விஜய் முதல்வராக வேண்டும் என்றாா்.